Saturday, May 18, 2013

தமிழ் வழிக்கல்வி-2


  ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழியில்தான் படிக்கவேண்டுமென்பது உலகின் மிகப்பெரிய அபத்தம். அன்று பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும், அதனால் பாரதி என்ன ஏழு மீடியத்திலுமா படித்திருப்பார். பாவாணர் அவர்களுக்கு என்பத்தி இரண்டு மொழி தெரியும், அதனால் பாவாணர் என்ன 82 மீடியத்திலுமா படித்திருப்பார்.

  இங்கு பெரும்பாலனவர்களுக்கு மொழிக்கும், அறிவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஆங்கிலத்தை ஒருமொழியாக நினைக்காமல் அதை அறிவாக நினைக்கிறார்கள். அதனால்தான் ஆங்கிலத்தின் மீது இவ்வளவு மோகம்.அதுமட்டுமல்ல நம்பள்ளிகள் ஆங்கிலத்தை மொழியாக போதிக்காமல் அறிவாக போதிக்கிறார்கள்.

  ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்நாளில் எவ்வளவு மொழியைக்கற்றுக்கொள்கிறானோ அந்தளவிற்கு அவன் அறிவு விரிவடையும் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி கற்றுக்கொள்வதிலும் எந்த தவறுமில்லை.ஆனால் தன் தாய்மொழியை மறுதலித்துவிட்டு அயல்மொழியை கொண்டாடுவது வெட்கக்கேடானது.ஆகையால்தான் எங்கள் குழந்தைகளை தாய்மொழிவழிக்கல்வியில் பயிலவேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.

இன்னும் பேசுவேன்...

No comments:

Post a Comment