இனி கட்டுரைக்குள் செல்வோம்.இது விவசாய நாடு,இந்தியா கிராமத்தில் வாழ்கிறது,கிராமம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள் என்ற பழைய பல்லவியே நானும் பாட விரும்பவில்லை. மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பைக் கண்டு பிடித்து சமைத்து உண்ணத் தொடங்கியதிலிருந்து இன்று நாம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது விவசாயம்தான்.முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவள் ஒரு பெண்தான்.ஆம் முதலில் ஆணும் பெண்ணும் உணவுக்காக வேட்டையாட இருவரும் சேர்ந்தே சென்றனர். ஒரு கட்டத்தில் ஆண் மட்டும் வேட்டையாட கிளம்பினான்.பிறகு தனிமையில் இருந்த பெண் சும்மா இருக்க பிடிக்காமல் விதை போல் இருந்த ஒன்றை பூமியில் ஊன்றிவைத்தால்,ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு அது விளைந்து நின்றது.இப்படித்தான் விவசாயத்தை பெண் நமக்கு அறிமுகப்படுத்தினால். பிறகு மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்தது எல்லாமே ஆத்தங்கரை ஓரத்தில்தான்.காரணம் பயிர் செய்வதற்கு ஏதுவான நீரும் நல்ல மண்வளமும் இங்கு அமைந்ததால். ஆகையால் நகரங்கள் ஆற்றங்கரையோரமே அமைந்தன. இப்படி மனித சமுதாயம் நாகரிக வளர்ச்சி அடைந்ததற்கு காரணமே விவசாயம்தான்.
ஆனால் இன்று இந்த விவசாயமும் விவசாயிகளின் நிலையும் எந்த அவலட்சனத்தில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. இந்த தேசத்தில்தான் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்கம் காலங்காலமாக உழைத்துக்கொண்டும் முதலாளி வர்கம் பாடுபடாமல் சொகுசான மகிழுந்தில் பயனித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.நான் இங்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கம்யூனிசம் பேச வரவில்லை.ஆனால் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத்தேவைகள் வேண்டும் என்றே கேட்கின்றேன்.
தேசத்தின் நான்காவது தூண் ஊடகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் இன்றைய ஊடகங்கள் கொஞ்சம் கூட ஊடக தர்மம் இல்லாமல் செயல் படுகின்றன.’’எழுத்தும் தெய்வம்,எழுதுகோல் தெயவம்’’ என்றானே மகாக்கவி பாரதி அதை மறந்து ஊடகங்கள் செயல்படும் விதம் மிகக் கேவலமாக உள்ளது.சினிமாவையும் கிரிகெட் போன்ற கேளிக்கையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊடகங்கள் நூற்றிருபது கோடிப்பேருக்கு சோறுபோடும் விவசாயிகளைப் பற்றி கொஞ்சளவேனும் எழுதுகிறார்களா?பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை அனைத்து மீடியாக்களும் போக்கஸ் செய்து கொண்டிருந்த அதேவேலையில் ,அதற்கு பக்கத்திலேயே விதர்பா பகுதியில் விவசாயத்தற்கொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதை ஒரு ஊடகமும் கண்டுக்கொள்ளவில்லை. அந்த அவல நிலை குறித்து ஒரு ஊடகமும் எழுதவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் பெட்டி செய்தியாக போட்டுவிட்டு போகிறார்கள். ‘விவசாயம் நிறைந்த ஒரு நாட்டில் வறுமை சூழ்ந்த ஒரு நாட்டில் சினிமாவும்,கிரிக்கெட்டும் தேவையா (இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா)’என்று நான் கேட்கவில்லை,உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி, இப்போதைய Press Council of India Chairman உயர்திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள் கேட்கிறார்.மீடியா சீர்திருத்தம் அவசியம் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார்.
தமிழனின் உழைப்பை பறைசாற்றும் உழவர்திரு நாளாம் பொங்கல் நாளன்றுகூட நம் வீட்டு டி.வி பெட்டியிலும் செய்திதாள்களிலும் சினிமாகாரர்கள்தானே ஆக்கிரமிக்கிரார்கள்.அனுஷ்காவின் அன்றாட நாட்குறிப்பு தொடங்கி இந்த பொங்கலுக்காவது ரஜினி படம் வருமா வராதா?என்று சினிமாகாரர்களை போட்டுபோட்டே நம்மை சிந்திக்க வைக்கவிடுவதில்லை இந்த தொலைக்காட்சியும் பத்திரிக்கைகளும். நம் விவசாயிகளின் தினத்தில் ஏன் இவர்கள் வந்து நம்மை ஆக்கிரமிப்பது. இந்த தினத்தில் ஒரு விவசாயியையாவது அழைத்து வந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கூட தோன்ற வில்லையா நம் ஊடகங்களுக்கு.இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே விவசாய சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது. பொதிகை கொஞ்சம் பங்கு கொள்கிறது.
இங்கு இருபத்தி நான்குமணி நேரத்திற்கும் காமெடிக்கு என்று பல சேனல்கள், பாடல்களுக்கு என்று பல சேனல்கள், விளையாட்டுக்கு என்று பல சேனல்கள். ஆனால் எழுபது சதவீதம் பேர் வேலை செய்யும் விவசாயத்திற்கென்று ஒரு சேனல்கள் உண்டா? ஏன் இந்த அவலநிலை? இந்த தேசம் சரியான பாதையில் பயணிக்கின்றதா?
ஊடகம்தான் இப்படி என்றால் நம்மால் நமக்காக தேர்ந்தெடுத்த அரசும் அரசியல் வாதிகளும் ஊடகங்களைவிட மோசமாக செயல்படுகிறார்கள்.விவசாயமே துளிகூட தெரிந்திடாத கொஞ்சம் கூட வியர்வை சிந்தி உழைக்காத ஒருவர்தான் இங்கு விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் அவல நிலை.இவர் எப்படி நமக்கு ஏற்ற சட்டங்கள் போடுவார்?விவசாயிகளின் பிரச்சனை இவருக்கு எப்படி தெரியும்?இதுவரை ஒரு விவசாயி கூட ஒரு ராஜசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கவில்லை.அதற்குள் சச்சின் இடம் பிடித்துவிட்டாரே. இப்பொழுது அவருக்கு பாரத ரத்னா கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசியல் நடந்து கொண்டிருக்க நம் இளைஞர்கள் சிலர் இதற்கு வக்காலத்து வாங்குவது மிகப்பெரிய கொடுமை.
இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் டாஸ்மாக், சினிமா, கிரிகெட் என்று இந்த வட்டத்திற்குள்ளே சுழலுகின்றனர்.கேட்டால் தினமும் உழைக்கின்றோம் ஒருநாள் ஓய்வு என்கிறார்கள். நான் இவர்களைப்பார்த்து தெரிந்தே ஒரு கேள்வி கேட்கிறேன்.நீங்கள் வாழும் இதே சமூகத்தில்தானே சினிமாவே கண்டிராத எத்தனையோ பேர் இன்னும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேலை உணவில்லாமல் பசியால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கேளிக்கைகள் தேவைப்படலாம்.ஆனால் பட்டினிச்சாவு நடந்து கொண்டிருக்கும் நம் சமுகத்திற்கு தேவையானதா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இப்படியாக எங்கெங்கு காணினும் விவசாயி நசுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறான்.விவசாய குடும்பத்திலிருந்து வந்த நம் வீட்டு படித்த இளைஞர்கள் நகரத்தில் தகுதிக்கு குறைவான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த பொறியியல் படித்த எத்தனையோ இளைஞர்கள் பத்தாம் வகுப்பு படித்து செய்யக் கூடிய ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்ள்.அப்படியென்றால் விவசாயக் குடும்பத்திலிருந்து பொறியியயல் படித்துவிட்டு நம் இளைஞர்கள்/இளைஞிகள் தனியார் நிறுவனத்திற்கு சென்று வேலை பார்க்கக் கூடாதா?அப்படியென்றால் அவர்கள் பெற்றோர்கள் செய்த விவசாயத்தையே இவர்களும் செய்ய வேண்டுமா? இது குலத்தொழில் போலல்லவா இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.
இவ்வளவு அவலநிலைகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்துகொண்டிருக்கும் நம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மிகக கொடுமையானது.முதலில் சரியான மின்சாரம் இல்லை, விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை,அதையும் மீறி இராப்பகல் பாரமல் பயிர்செய்து உற்பத்தி செய்துகொண்டு போனால் நியாயமான விலைக்கு கேட்பதில்லை.இது போன்ற இல்லைகளே அதிகம்.
சரி அனைவரும் புறந்தள்ளும் விவசாயத்தில், இவ்வளவு பிரச்சனைகள் சூழ்ந்துள்ள விவசாயத்தில் எப்படிதான் லாபகரமான விவசாயியாக உருவெடுப்பது? இதற்கு நம் இளைஞர்கள்/இளைஞிகள் என்ன செய்ய வேண்டும்? சுயசார்புடைய கிராமங்களை உருவாக்குவது எப்படி?
தொடரும்...