Saturday, May 18, 2013

தமிழ் வழிக்கல்வி-1


   இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்கவைக்கலாம் என்பதே பேச்சாக இருக்கிறது. கூலி வேலை செய்யும் பெற்றோர்கள்கூட எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்கவைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதுவும் சமச்சீர் கல்வி வந்தவுடன் பெருநகரங்களில் சி.பி.எஸ்.ஸி-யில் படிக்கவைக்கலாமா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

  இன்று என்னவருடன் எங்கள் எதிர்காலதிட்டங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். வருங்காலத்தில் எங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்கலாமென்றும் அதுவும் தமிழ்வழியிலேயே படிக்கவைக்கலாமென்றும் முடிவு எடுத்துள்ளோம். ஆம் இது ஏதோ உணர்ச்சி வயப்பட்டு எடுத்தமுடிவல்ல. நம்மைச்சுற்றி இருக்கும் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், எந்த மீடியத்தில் படித்தாலும் நாம் நம் குழந்தைகளை கண்டிப்பாக தமிழ் வழியிலேயே படிக்க வைக்கவேண்டும் என் முடிவாக இருக்கிறோம்.

  காரணம் எந்த குழந்தையும் தன் தாய்வழியில் படிக்கும்போதே அவர்களின் புரிதல் மேனமையடைகின்றது. அவர்களின் பார்வை விசாலமடைகின்றன. தன்னம்பிக்கை அதிகரிக்கின்றன. இன்று பல சாதனையாளர்கள் தாய்மொழிவழியில் படித்தவர்கள்தான். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நமது அறிவியல் விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தான் போகும் இடம்மெல்லாம் நான் தமிழ்வழியில் படித்ததால்தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். நான் சாதித்தமைக்கு என்தாய்மொழிவழி கல்வியே காரணம் என்று நம் தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றுகிறார். கண்டிப்பாக நாங்களும் அப்படி ஒரு சாதனையாளர்களை உருவாக்கி காட்டுவோம்!.

இன்னும் இதைப்பற்றி தொடர்ந்துபேசுவேன்...

No comments:

Post a Comment