வாரத்தில் இரண்டு,மூன்று புத்தகங்களையாவது நான் வாசித்து விடுவேன்.நான் வாசித்த புத்தகங்களை ’’நான் படித்த நல்ல நூல்’’ என்னும் தலைப்பில் வாரம் ஒருமுறை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.என் குழந்தைப் பருவம் தொட்டு புத்தகங்கள் எனக்கு நல்ல வழிகாட்டியாக வந்துகொண்டிருக்கிறது.என் குடும்பத்தில் என் அம்மாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது.அதன் காரணமாகக் கூட எனக்கு புத்தகங்களின் மீது ஈர்ப்பு ஏற்ப்ட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.நான் மனிதர்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவிற்கு புத்தகங்களையும் நேசிக்கக் கூடியவள்.உங்களுக்குத் தெரியும் தமிழில் புத்தகத்திற்கு ’நூல்’ என்றொரு பெயர் உண்டு.அதற்கு என்ன பொருள் தெரியுமா? இதற்கு தமிழருவிமணியன் ஐயா அவர்களின் விளக்கத்தை கேளுங்கள்: நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால் அந்த வீட்டிற்கு கதவு,ஜன்னல் பொருத்த தச்சரை நாடுவீர்கள்.அந்த தச்சர் கதவை சரியான நிலைக்கு கொண்டுவரவும் அதன் முண்டுகளையும் தேவை இல்லாத வற்றையும் நீக்க நூலை வைத்துத்தான் சரிசெய்வார்.அதுபோலதான் நண்பர்களே, நம் மன அழுக்குகளை அகற்றி பண்பட்ட மனிதர்களாக உருவாக நூலை வைத்துதான் சரி செய்ய முடியும்.ஆகையால் தான் புத்தகத்திற்கு நூல் என்று தமிழில் பெயருண்டு.இது போல் தமிழைத் தவிர வேறெந்த மொழிகளிலும் புத்தகத்திற்கு நூல் என்று சரியான பொருள் இருப்பதாக நான் அறிந்த வரையில் இல்லை.அதுதான் தமிழின் சிறப்பு.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்ளை நான் வாசித்த நல்ல புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.அவசியம் நீங்கள் இந்த புத்தகங்களை வாசிக்கலாம்.சரி இந்த வாரத்திற்கான புத்தகத்திற்கு வருவோம்.
என கல்லூரி காலத்தில்தான் திரு.இறையன்பு I.A.S அவர்கள் தொலைக்காட்சியின் வாயிலாக எனக்கு அறிமுகமானார்.அவருடைய நேர்மையும்,எளிமையும்தான் என்னை மிகவும் கவர்ந்தன.பிறகு அவரின் ’ஆத்தங்கரையோரம்’ என்னும் புத்தகத்தை வாசித்தேன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் அவருடைய ’உன்னோடு ஒரு நிமிஷம்’ என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தைப் படித்தேன்.இந்த புத்தகம்‘சுட்டி விகடன்’ இதழில் ஒரு பக்கத்திற்கு ஒவ்வொரு இதழிலும் எழுதப்பட்ட கட்டுரைகளாகும்.இன்றைய குழந்தைகளுடைய வாழ்க்கையில் தென்படாத சில கூறுகளை நம்முடைய வாழ்க்கையிலிருந்து தொடங்கி பகிர்ந்து கொள்வது போல் எழுதப்பட்ட நூல்.அழகான படங்களோடு வெளிவந்த நூல்.
நான் சுட்டி விகடனில் தொடராக வாசித்தபோதே முடிவு செய்துவிட்டேன்.இது புத்தகமாக வந்தப் பிறகு அவசியம் வாங்கியாக வேண்டும் என்று.இது குழந்தைகளுக்கானப் புத்தகம் என்றாலும் தம் பிள்ளைகளின் எதிகாலம் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டும்.தம் குழந்தைகளை அதிகம் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோமே ஒழிய நல்ல பண்புள்ளவர்களாக வரவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் திரு.இறையன்பு அவர்கள் இந்த புத்தகத்தின் மூலம் குழந்தைகளின் சின்னச்சின்ன ஒழுக்கப் பண்புகளைப் பற்றிப் பேசுகிறார்.இந்த நூல் உருவானதைப்பற்றி திரு.இறையன்பு அவர்களே இதோ இப்படிச் சொல்கிறார்:
’’சுட்டி விகடனில் எழுதுவதற்கு வாய்ப்பு வந்தபோது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய எழுதியும் பேசியும் இருக்கிறேன் என்றாலும்,குழந்தைகளுக்காக எழுதுவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.நாமே குழந்தைப் பருவத்துக்குப் பயணப்பட சம்மதிக்கும் போதுதான் அதைச் செவ்வனே செய்யமுடியும் என்பதை நான் உணர்வேன்.அவர்கள் அருகிலேயே அமர்ந்துகொண்டு உரையாடுவதைப் போல பகிர்ந்து கொள்வதுதான் எழுதும் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும்.அந்த வகையில் ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’என்கிற தொடர் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
ஒவ்வொரு இதழிலும் ஒரே ஒரு செய்தியை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.சின்ன வயதில் நான் எவற்றையெல்லாம் செய்வேன் என்பதைக் காட்சிப்படுத்திப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் இந்தத் தொடர் தொடர்ந்தது.’’
ஆகவே நண்பர்களே எவ்வளவுதான் நான் இந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் நீங்கள் இப்புத்தகத்தை வாசிக்கும் போதுதான் உள் வாங்கிக் கொள்ள முடியும்.நல்ல குழந்தைகளை உருவாக்குவது நல்ல குடிமகன்களை உருவாக்குவதாகும்.நாளைய நல்ல குடிமகன்களுக்கு இந்த பூரணி எமிலியின் வாழ்த்துக்கள்!
முதல் பதிப்பு: பிப்ரவரி 2010
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை : 90
தொடர்ந்து வாசிப்போம்...
நல்லா எழுதுறீங்க பூரணி எமிலி! தொடர்ந்து இது போல் நிறைய நல்ல புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா!
Deleteஅருமையான வரிகள் பூரணி.தொடரட்டும்....
ReplyDeleteநன்றி ராஜ்....
Delete